tamilnadu

img

நகை கடன் கட்டுப்பாடுகளை முழுவதும் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நகை கடன் கட்டுப்பாடுகளை முழுவதும் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரியலூர், மே 30-  ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகைக் கடன் கட்டுப்பாடுகளை உடனே வாபஸ்பெற வலியுறுத்தி அரியலூர் மாதாகோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அரியலூர் மாதா கோவில் முன்பு, ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியலூர் ஒன்றியச் செயலாளர்  அருண்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்  மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் விவசாயம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கிகளில் பெறக்கூடிய நகைக் கடன்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது, விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள நகைக் கடன் கட்டுப்பாடுகளை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். நகைக்கடன் வழங்குவதில் பழைய நடைமுறைகள் தொடர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.  ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், பி.துரைசாமி, வி.பரமசிவம், துரை அருணன், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன், ஆண்டிமடம் வட்டச் செயலாளர் வேல்முருகன், சந்தானம், மூத்த நிர்வாகி சிற்றம்பலம், திருமானூர் ஒன்றிய எஸ்.பி. சாமிதுரை, மாவட்டக்குழு பி.பத்மாவதி, ஆர்.ரவீந்திரன், அழகுதுரை, மலர்கொடி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.