மதுரை, ஜூன் 11- மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பத்மநாபன் ஆகி யோர் உண்மைக்குப் புறம்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறை துணைத் தலைவர் பொய்ப்புகார் குறித்து கொடுக்கப்பட்டுள்ள புகார்கள், சம்ப வங்களை விசாரித்து, சம்பவத்தில் ஈடுபடாத மார்க்சிஸ்ட் கட்சியின் தே.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா ளர் வி.சமையன், அவரது மகன்கள் சந்துரு, சேகுவேரா மற்றும் வி.சமை யனின் தங்கை மகன்கள் அஜய் குமார், ஆகாஷ்குமார் ஆகியோர் மீது போடப்பட்ட உண்மைக்கு மாறான வழக்குகளை ரத்து செய்யவேண்டும். வன்னிவேலம்பட்டி கிராமத்தில் காவல்துறையினரின் தொடர் அச்சுறுத்தலை தவிர்க்க ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று தே.கல்லுப்பட்டி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத் தாய், எஸ்.பாலா உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.