பாலியல் வல்லுறவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெண்கள், குழந்தைகள் மீதான பாலி யல் வல்லுறவை கண்டித்து மாதர், வாலி பர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பெண் குழந்தைகளை குறிவைத்து பாலி யல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும். குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல்துறை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி யில் அதிகரித்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி முத்தியால்பேட்டை மார்க்கெட் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார்.சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், மாநிலச் செய லாளர் இளவரசி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் கொளஞ்சியப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், மாநில செயலாளர் சஞ்சய் சேகரன், மாண வர் சங்க செயலாளர் பிரவீன் குமார் ஆகி யோர் உரையாற்றினர். சங்கங்களின் நிர்வாகி கள் சத்யா, ஜானகி, நிலவழகன், ஜெய பிரகாஷ் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.