“இந்தியா முழுவதும் ரேசன் கடைகள் உள்ளன. ஆனால் புதுச்சேரி இதற்கு விதிவிலக்காக ரேசன் கடைகளே இல்லாத ஒரே மாநிலமாக விளங்குவது மக்கள் விரோதச் செயலாகும். ஒன்றிய அரசின் கொள்கை திணிப்புக்கு உடன்பட்டே ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இக்கடைகளை நம்பியிருக்கும் லட்சக் கணக்கான மக்களும், நூற்றுக் கணக்கான ஊழியர்களும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.உடனடியாக ரேசன் கடைகளை திறக்க வேண்டும் என்று மீண்டும் இந்த அரசை திமுக வலியுறுத்துகிறது. இதில் அரசு மெத்தனம் காட்டுமேயானால் மாநில அளவில் மட்டுமின்றி ஒவ்வொரு ரேசன் கடை முன்பாகவும் பொதுமக்களையும், ஊழியர்களையும் திரட்டி மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.