சென்னை,டிச.30- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், மீன்பிடி விசைப்படகு களில் பொருத்திட மேம்படுத்தப் பட்ட டிரான்ஸ்பாண்டர்களை உரு வாக்கியுள்ளது. நிலப்பரப்பிலி ருந்து இந்த டிரான்ஸ்பாண்டர் கள் மூலம் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ள லாம். இக்கருவியை படகில் பொருத்தி, புளூடூத் வாயிலாக இக்கருவியை இணைத்து அலை பேசியில் உள்ள செயலி வழியாக தகவல்களையும் பெறலாம். டிரான்ஸ்பாண்டர்களை மீன்பிடி விசைப்படகில் பொருத்து வதால், மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெரு மழை போன்ற ஆபத்தில் இருக் கும் போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும். அதேபோன்று, கரையிலுள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, அவசர செய்தியை படகிற்கு அனுப்பவோ இயலும். அதுமட்டுமின்றி, அதிக மீன்கிடைக்கும் இடங்கள், கால நிலை,
வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை அவ்வப்போது படகிற்கு அனுப்ப இயலும். மேலும், இக்கருவியின் மூலம் ஆழ்கடலில் படகு நிலை கொண்டுள்ள இடத்தை துல்லிய மாக கண்டறிந்து ஆபத்து காலங்க ளில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வும், படகு கடலில் பயணம் செல்லும் பாதையையும் கண்ட றிய இயலும். கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீலபுரட்சித் திட்டத்தின் கீழ், ரூ. 18.01 கோடி செலவில் தமிழ்நாட்டிலுள்ள 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ் பாண்டர்கள் பொருத்தும் திட்டத் தினை தொடங்கி வைக்கும் அடை யாளமாக சென்னை, நாகை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 10 விசைப்படகு உரிமையா ளர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று(டிச.30) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதி காரிகள் கலந்து கொண்டனர்.