ஒட்டன்சத்திரம்,ஜூலை 1- ஒட்டன்சத்திரத்தில் அர சின் சார்பில் முருங்கை விதை எண்ணெய் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ள னர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பி ளிக்கை, சத்திரப்பட்டி, பொருளுர், தொப்பம்பட்டி, இடையக்கோட்டை, மார்க் கம்பட்டி, மாம்பாறை, அய் யம்பாளையம், கள்ளி மந்தையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமப்பகுதிகளில் மரம் மற்றும் செடி முருங்கை பயி ரிடப்படுகிறது. விளைவிக்கப்படும் முருங்கையை அறுவடை செய்து ஒட்டன்சத்திரம் மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயி கள் விற்பனை செய்கிறார் கள். இங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும் அதே போல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிக ளில் விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. குறைந்த அளவு முருங்கை வரத்தின்போது அதிக விலைக்கும், அதிக முருங்கை வரத்தின்போது மிகக்குறைந்த விலைக்கும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகி றார்கள். சராசரியான விலை வருடம் முழுவதும் கிடைக் காததாலும் அதிக வரத்தின் ்போது முருங்கையை வியாபாரிகள் வாங்க முன் வராததால் கால்நடை தீவனமாக பயன்படுத்துவ தால் விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வரு கின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதி யில் அரசின் சார்பில் முருங் கை விதையில் இருந்து எண்ணெய் தயாரிப்பதும் மற்றும் முருங்கை பவுடர் தயாரித்தும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.