tamilnadu

img

தூர்வாரும் பணிக்கு முன்னுரிமை: முதல்வர்

“ஜுன் 12 - பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறேன்”

திருச்சிராப்பள்ளி, ஜூன் 9- காவிரி டெல்டாவில் ஆறுகள்,  கால்வாய்களை தூர்வாரும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப் படும் என்றும் பாசனத்திற்காக ஜுன் 12 அன்று மேட்டூர் அணை யை தானே திறந்து வைக்க இருப்பதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருச்சிராப் பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங் களில் இருக்கக்கூடிய சேத்தி யாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற் கான ஏல அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்ட உடனே, அடுத்த நிமிடமே தமிழக அரசு அதை எதிர்த்துப் போராடியது. ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஒருபோதும் இதை  அனுமதிக்கமாட்டோம் என்று  நானே அறிவித்தேன். இதன்மூல மாக ஒன்றிய அரசு ஏல அறிவிக்கையை ரத்து செய்தது.

தூர்வாரும் பணி


டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல் படும். அதேபோல், காவிரி டெல் டாவின் வேளாண் வளர்ச்சிக்கும்,  இந்தப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரவும் முன்னுரிமை அளித்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கான குறிப்பிட்ட தேதியான ஜூன் 12 அன்று நான் மேட்டூர் சென்று அணையை டெல்டா பாசனத்திற் காக திறந்து வைக்க இருக் கின்றேன். சென்ற ஆண்டுகளில் நாம் சாதித்து காட்டியது போலவே, மேட்டூர் அணையின் நீர் காவிரி டெல்டா பகுதிக்கு வரு வதற்கு முன்னதாகவே நான் ஏற்கெனவே உங்களிடம் கூறிய படி அனைத்து தூர்வாரும் பணி களும் சிறப்பாக முடிக்கப்படும். இந்த ஆண்டும் டெல்டா விவ சாயிகள் நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதியதோர் சாதனை படைப் பார்கள் என உறுதியாக நம்பு கிறேன். தூர்வாரும் பணியை தொடர்ச்சியாகச் செய்து மண்ணையும் மக்களையும் காப்போம்”.  இவ்வாறு அவர் கூறினார்.

மேகேதாட்டு அணை

தமிழக முதல்வரிடம், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “கர்நாட காவில் புதிதாக பொறுப் பேற்றுள்ள காங்கிரஸ் அரசு மட்டு மல்ல, ஏற்கெனவே இருந்த அர சும் மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்றுதான் கூறி  வந்தது. அப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு தான் இருந்தோம். அதேநிலை யில்தான் எங்களுடைய ஆட்சி இன்றைக்கும் உள்ளது. கருணாநிதி எப்படி அந்த விச யத்தில் உறுதியாக இருந்தாரோ, அதே உறுதியோடு இந்த ஆட்சி நிச்சயமாக இருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்” என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர், பயிர் காப்பீட்டை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார். ஆளுநரே காரணம் “சட்டசபையில் நிறைவேற் றிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளது தொடர் பாக நீதிமன்றத்தை நாடலாமா என சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து வருகிறோம்” என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படுவாரா என்ற கேள்விக்கு, “நாங்கள் நினைப்ப தெல்லாம் நடந்து விட்டால் இந்த பிரச்சனைகளே இல்லை” என்று குறிப்பிட்டார்.  மேலும், “தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததற்கு ஆளு நர் தான் காரணம். இது போன்ற  பிரச்சனைகளை தீர்க்கவே பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சர் இருக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.  “பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயர் வைப்பது குறி த்து ஆலோசித்து வருகிறோம். இருக்கும் பல்கலைக்கழகத் திற்கு அவர் பெயர் வைக்க லாமா அல்லது புதிய பல்கலைக் கழகம் உருவாக்கி அதற்கு வைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்” எனவும் முதல்வர் தெரிவித்தார். 

பொய்ப்பிரச்சாரம்

“மின் கட்டணம் உயர்த்தப் படுவதாக திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் பரப்பப்படுகிறது. வீட்டு இணைப்புக்கு எந்தவித  கட்டண உயர்வும் கிடையாது. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்.  ஒன்றிய அரசின் மின் கட்டண விதிப்படி 4.7 விழுக்காடு கட்டணத்தை உயர்த்த வேண்டும்; ஆனால் 2.18 விழுக்காடாக அதை தமிழ்நாடு அரசு குறைத்து அந்த தொகையையும் மானிய மாக தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டுள்ளது” என்று தெரி வித்த முதல்வர், “வணிகம்,  தொழில் நிறுவனங்களுக்கு 13  பைசா முதல் 21 பைசா வரை உயர்வு இருக்கும். அ.தி.மு.க  ஆட்சியில் மின்கட்டணம் செங்குத்தாக உயர்த்தப்பட்டது. மின்வாரியத்தை கடனில் மூழ் கடித்து விட்டார்கள். அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான்  இந்தப் பிரச்சனை” எனக் குறிப்பிட்டார்.

ஆவினில் சிறுவர்கள் இல்லை

ஆவினில் சிறுவர்களை வேலைக்கு பயன்படுத்துவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. அது குறித்து தயாரிக்கப்பட்ட ஆதாரம் பொய்யாக தயாரிக்கப் பட்டு அது பரப்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.  மருத்துவக் கல்லூரியில் கேமரா இல்லை  என மூன்று மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகா ரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. உரிய அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளித்த பின்பு தற்பொழுது மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

பாஜகவை வீழ்த்தும் வியூகம்

ஜுன் 23 அன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை அழைத்து ஒரு கூட்டம் கூட்டியுள்ளார். அதில்  பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும். அந்தக் கூட்டத்தில் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.     (ந.நி.)