tamilnadu

img

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் மாநில மாநாடு - பேரணி

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் மாநில மாநாடு - பேரணி

திண்டுக்கல்லில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திண்டுக்கல், மே 3- திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்  நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் 7-ஆவது மாநில மாநாட்டின் நிறை வாக மாபெரும் பேரணி - பொதுக்கூட் டம் நடைபெற்றது. சனிக்கிழமையன்று மாலை 4 மணி  அளவில் திண்டுக்கல் ஆர்.எம். காலனி யில் பேரணி துவங்கியது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத்தலை வர் அ.மாயவன் பேரணியைத் துவக்கி  வைத்தார். மாநில துணைத்தலைவர்கள் மா. ஆரோக்கியராஜ், பெ.செ. அமர்நாத் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநி லத் தலைவர் மூ. மணிமேகலை, மாநில  பொதுச்செயலாளர் ச.மயில், பொருளா ளர் தா.கணேசன் உள்ளிட்ட மாநில  நிர்வாகிகள் பங்கேற்றனர்.  தேசிய கல்விக்கொள்கையை கை விட வேண்டும்; இந்தி மொழியை திணிக்  கக் கூடாது; தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்க வேண்டும் என ஒன்றிய  அரசை வலியுறுத்தியும், பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்பவும் வழங்க வேண்டும்; பழைய பென்சன் திட்டத்தை  மீண்டும் அமலாக்க வேண்டும், ஒருங்கி ணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும்; காலமுறை ஊதியத்தோடு ஆசிரியர் பணி நியமனங்களை மேற் கொள்ள வேண்டும் என தமிழக அரசை  வலியுறுத்தியும் பேரணியில் முழக்கங் கள் எழுப்பப்பட்டன. பேரணியின் நிறைவாக ரவுண்ட் ரோடு புதூர் உள்ள நாகா லட்சுமி தியேட்  டர் மைதானத்தில் ஆசிரியர் நா. நாகப்பன்  நினைவுத் திடலில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ. மணிமேகலை தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ச.  மயில் மாநாட்டுத் தீர்மான விளக்கவுரை யாற்றினார். சங்கத்தின் துணைப் பொதுச்  செயலாளர் தே. முருகன், எஸ்.டி.எப்.ஐ.  அகில இந்திய செயலாளர் அ. சங்கர்,  பொதுக்குழு உறுப்பினர் டேவிட்ராஜன், மாநிலப் பொருளாளர் தா. கணேசன் ஆகி யோர் பங்கேற்று பேசினர். அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலை வர்களுள் ஒருவரும் திண்டுக்கல் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான கே.  பாலபாரதி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சக்திக் கலைக்குழு, புதுக்கோட்டை பூபா ளம், மதுரை கரிசல் கருணாநிதி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.