மயிலாடுதுறையில் செந்தொண்டர்களுக்கு பாராட்டு
மயிலாடுதுறை, ஜுன் 7- மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள தோழர் கோ.பாரதிமோகன் நினைவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டு அணிவகுப்பில் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 140 செந்தொண்டர்களுக்கு மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் செந்தொண்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாநில கன்வீனருமான ஜி.ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், ஜி. வெண்ணிலா, சி.விஜயகாந்த், கே.பி. மார்க்ஸ், டி.ஜி. ரவிச்சந்திரன், ஏ.அமுல்காஸ்ட்ரோ, செந்தொண்டர் அணியின் கேப்டன் எம். ஐயப்பன் ஆகியோர் உரையாற்றினர். மயிலாடுதுறை நகரச் செயலாளர் டி.துரைக்கண்ணு, ஒன்றியச் செயலாளர்கள் கே.கேசவன், கே.அசோகன், பி. ராமகுரு, மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் டி. கணேசன், பொருளாளர் வி.பழனிவேலு மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சியினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அகில இந்திய மாநாட்டில் செந்தொண்டராக கலந்து கொண்டது குறித்து தங்களது அனுபவங்களை செந்தொண்டர்கள் பகிர்ந்து கொண்டனர்.