tamilnadu

img

மயிலாடும்பாறையில் இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்

கடமலைக்குண்டு, டிச.5- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை காவலர் குடியி ருப்பு அருகே ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த  அலுவலக கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீர மைக்கப்படாமல் உள்ளது. இதனால் கட்டிடத்தின் மேற் கூரை மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் அலுவலக கட்டி டத்துக்குள் நீர்க்கசிவு ஏற்படுகிறது.  தொடர் நீர்க்கசிவு காரணமாக கட்டிடத்தின் உள்ளே யும் வெளியேயும் பாசிகள் காணப்படுகிறது. இடிந்து  விழும் அபாயம் உள்ளதால் மின்வாரிய பணியாளர்கள்  அச்சத்துடனே அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மயிலாடும்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அலு வலகத்திற்குள் அதிக அளவில் நீர்க்கசிவு ஏற்பட்டுள் ளது. இதனால் முக்கிய ஆவணங்கள் நீரில் நனைந்து  வீணாகும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடும்பாறையில் இடம் தேர்வு செய்து புதிய மின்வாரிய அலுவலகம் கட்ட  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.