திருச்சிராப்பள்ளி, அக்.27- சிஐடியு தமிழ்மாநில 15-ஆவது மாநாடு நவம்பர் 4, 5, 6- தேதிகளில் கன்னி யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இதில் பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி ஏற்றப்பட வுள்ளது. இதையொட்டி பொன்மலை சங்கத் திடலில் வியாழனன்று நடைபெற்ற பொன்மலை தியாகிகள் நினைவுஜோதி பயண நிகழ்ச்சிக்கு பயணக்குழு தலை வரும், டிஆர்இயு செயல் தலைவரு மான ஜானகிராமன் தலைமை வகித் தார். பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதியை கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை எடுத்துக் கொடுக்க அதனை பயணக்குழு தலை வர் ஜானகிராமன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், சிஐ டியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜ், மாவட்டத் தலைவர் சம்பத், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல் வம், மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் ஜெயபால் மற்றும் திருச்சி புறநகர், கரூர், நாமக்கல் மாவட்ட சிஐ டியு, டிஆர்இயு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருச்சியிலிருந்து புறப்பட்ட பொன் மலை தியாகிகள் நினைவு ஜோதி பய ணம் கரூர், நாமக்கல் வழியாக நாகர் கோவிலை சென்றடையும்.