tamilnadu

img

கவிஞர்களை பிரசவித்த பொங்கலூர் கவிதைக்களம் - க.சம்பத்குமார்

இயந்திரகதியான வாழ்க்கை ஒட்டத்தில், நவீன தொழில்நுட்பத்தில் விளைந்த சமூக ஊடகக் களத்தில் வேகம், வேகம், வேகம் என எல்லாமே அவசரகதியாகக் கடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆர்வமும், தேடுதலும் கொண்ட இலக்கியப் படைப்புகள் சாத்தியமா, அல்லது கரைந்து காணாமல் போய்விடுமோ என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சூழலில் ஆகஸ்ட் 18இல் பொங்கலூரில் மாவட்ட அளவிலான மாபெரும் கவிதைப் போட்டி என்று பொங்கலூர் தமுஎகச அறிவித்திருந்தது. அதற்கு என்ன வரவேற்புக் கிடைத்துவிடப் போகிறது என்ற ஐயம் இயல்பாகவே மனதுக்குள் இருந்தது.

இந்த நிலையில்தான், அவிநாசியில் இருந்து  ஐந்து நபர்களாக பொங்கலூர் நோக்கி பய ணிக்கத் தொடங்கினோம். கவிதை குறித்த தீராத  தாகம் கொண்ட பெண், கவிதை தலைப்பில் உடன்பாடில்லாத இளைஞர் மற்றும் புதிய அனுபவம் ஒன்றிற்காக காத்திருக்கும் இளை யவர் என கலவையான மனோபாவம் கொண்ட  பங்கேற்பாளர்களோடு நானும் (சம்பத்குமார்), கிளைச் செயலாளர் தினகரனும் என்பதாக  இருந்தது எங்கள் அணி. நிகழிடத்தை நெருங் கும் சமயம், உடன் பங்கேற்பாளர்களிடம் “இது  கவிதைப் போட்டி. இதில் பங்கேற்போர் எண் ணிக்கை குறைவாக இருக்கவே வாய்ப்புண்டு. கூட்டமே இல்லை என மனம் தளர்ந்திடக் கூடாது.  உங்களின் படைப்பில் கவனம் வையுங்கள்!” எனக் கூறினோம். அரங்கின் முன்வாசலைத் தொட்டதும் “அடடா, அப்படிச் சொல்லாமலே இருந்திருக்கலாமே!!” என வருத்தப்பட நேர்ந்தது. ஆம், கவிதைப்போட்டி துவங்க இன்னும்  கால அவகாசம் இருக்கும்போதே போட்டியா ளர்களால் அரங்கில் பாதி நிறைந்திருந்தது. கூடு தலாக பதிவரங்கில் இன்னும் பலபேர் பெயர்  பதிய நின்றிருந்தனர். பலர் தேர்வறை நோக்கி  வரும் பாவனையில் அரங்கு நோக்கி வந்து கொண்டிருந்தனர். தொடர் உழைப்பினால் உடல்நலமின்றி சோர்ந்திருந்த பொங்கலூர் நாட்ராயன் அவர்கள்  விட்ட இடத்திலிருந்து திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வை சுழல் வேகத்தில் இயக்கிக் கொண்டிருந்தனர். பார்க்க, உணர்வெ ழுச்சி தரக்கூடியதாக இருந்தது. போட்டி அரங்கில் நூறு பேருக்கான இருக்கைகள் தயாராக இருந்தும் இன்னமும் கூடுதலாக ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து போட்டியாளர்கள் வருகை இருந்த தால் ஏற்பாட்டாளர்கள் சற்றே திகைத்துத்தான் போனார்கள். என்றாலும் மனதில் ஊறிவரும் பரவசம் அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கும்.

போட்டியாளர்களில் பலரும் இளைஞர்கள். அவர்களின் பங்கிற்கும் குறையாமல் வயது முதிர்ந்தவர்கள் பங்கு கொண்டதும் அவர்கள் குழுவாக பின்வரிசையில் தனித்தமர்ந்து நிதா னமாக கவிதை புனைந்ததும் தனித்துவமான அழகு. எவரோடும் பகிர முடியாது போன  அவர்களின் எண்ணங்கள் இங்கு வண்ணங் களாகி அழகிய கவிச் சித்திரமாக வடிவாகி யிருக்கலாம். இது, இப்போட்டியின் அழகான தருணங்களில் ஒன்று. கவிதைகள் படைப்பாளிகளின் பார்வைக் கும் வயதிற்கும் ஏற்ப வடிவத்திலும் உள்ளடக் கத்திலும் மாற்றங்களைக் கொண்டிருந்தது. பெரியவர்களின் கவிதைகளில் ஓசைநயம் கூடி  இருக்க, இளையோர் கவிதைகள் உரையாடல்  தன்மையும் அறிவியல் பார்வையும் கொண்ட தாக இருந்ததைக் காண முடிந்தது. தகுந்த சொற்களை தேர்வு செய்ய அறியாதது; கூடுதல்  வரிகளால் கவிதைகளை நீர்த்துப் போகச்  செய்வது; இணையவெளி கவிதைகளை தன தாக்கிக் கொள்வது என சில போதாமைகளையும் கவிஞர்களின் படைப்புகளில் காண நேர்ந்தது. சுய தேடலும் வாசிப்புப் பயிற்சியும் வருங் காலங்களில் அவர்களை மேம்படுத்தும். கவிதை எழுதுவதற்கான பயிற்சி முகாம்கள் அவர்களுக்கு கை கொடுக்கலாம். போட்டியரங்கை கவனித்ததில், போட்டி யாளர்களில் பெரும்பான்மையினராக இருந்த பெண்களின் அணி சேர்ப்பும் அழகாக இருந்தது.  மகளோடு, சகோதரியோடு, தோழியோடு என அணி சேர்ந்திருந்த பெண்கள் நிகழ்வைப் போட்டியாகக் கருதாமல் திருவிழாவாக மாற்றி யிருந்தனர். அவர்களிடையே பரிசிற்கான ஆவே சத்தை விட பங்களிப்பிற்கான ஆர்வமே மேலோங்கியிருந்தது. வேறெந்த படைப்பை யும் விட, தன் மனதில் தோன்றும் எண்ணங்களை யும், உணர்வுகளையும், ரகசியங்களையும், காயங்களையும், சமூக நோக்கையும் நுட்ப மாகப் பதிவு செய்யும் வலிமை படைத்தது கவிதை தான்! எனவே இக்கவிதைப் போட்டி யில் பெண் கவிஞர்கள் பங்கேற்பு அவர்களின் விடுதலை உணர்வின் குறியீடாக இருந்தது என்றே சொல்லலாம்.

சிறப்பு அழைப்பாளர்களாக மேடையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயலில், போட்டியாளராக களத்தில் மட்டுமல்ல, போட்டி யில் வென்று பரிசுக்கும் பாராட்டிற்கும் உரிய சிறப்பிடத்திலும் என இந்த நிகழ்வெங்கும் பெண்களே நிறைந்திருந்தது சத்தமின்றி நிகழ்ந்த சாதனையாகவே கருத வேண்டும். கிட்டத்தட்ட நூற்றைம்பதுக்கும் மேலான கவிதைகளை ஒருமணி நேரத்திற்குள் வாசித்து சிறந்த எட்டு கவிதைகளைத் தேர்வு  செய்வதென்பது சவாலான காரியமாகவே இருந்  தது. எனினும், நடுவர் குழு தங்களுக்கிடையே யான உரையாடல்கள் வழி சிறப்பான கவிதை களையே தேர்வு செய்திருந்தனர். தேர்வான கவிதைகள் அரங்கில் வாசிக்கப்படும்போது அதற்குக் கிடைத்த வரவேற்பே போட்டியா ளர்களின் ஆமோதிப்பை வழங்குவதாக அமைந்தது. படைப்பாளர்களை பாராட்டி பரிசளித்து சிறப்பித்த பெண்ணிய செயற்பாட்டாளர் கவி ஞர் வெற்றிச்செல்வி, தனது உரையில் காதலைக்  குறித்துத் தொடங்கினார். தொடர்ச்சியாக கவிதையில் சமூகம் குறித்த பார்வையை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை தெளிந்த நீரோடை போன்ற தனது சொற்களால் படைப்பாளர்களிடம் அறிவுறுத்தினார். அவரின் உரை அனைவரின் பாராட்டுதலைப் பெற்றது. மதிய உணவிற்கான காலம் கடப்பதை அறிந்து, தோழர் பாலபாரதி சுருக்கமாக படைப்  பாளர்களிடம் நல்லுணர்வை தூண்டும்படி யாகப் பேசி அமர்ந்தார். நிகழ்வு முடிந்து திரும்புகையில் எங்கள் அணியில் ஒருவரும் ஆறுதல் பரிசு பெற்றி ருந்தது மகிழ்வாயிருந்தது. கவிதை குறித்த  புதிய நோக்கமும், ஆர்வமும் எங்களிடையே யும் பரவி இருந்தது. அவரவர் கவிதையில் இருந்த சரி, தவறுகள் குறித்த உரையாடல் ஊர் வந்து சேர்ந்த பின்னும் தொடர்ந்தது. இச்சிறு சலனம் எல்லோருக்கும் அவசியமானது தானே! பெரும் பாய்ச்சலாய், காலம் அறிந்து செய லாற்றிய பொங்கலூர் தமுஎகச கிளை நம்மி டையே கை நிறைய கவிஞர்களை அடையா ளப்படுத்தியிருக்கிறார்கள். இந்த தொட ரோட்டத்திற்கான கோல் இப்போது நம் அனைவ ரின் கைகளிலும் தரப்பட்டிருக்கிறது. போதிய  பயிற்சியும் ஊக்கமும் சமூகப் பார்வையையும் அளித்து அவர்களை சமத்துவ உலகிற்கான படையணியாக பரிணாமிக்கச் செய்ய வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ந்து செயலாற்றுவோம். வெளிச் சம் பிறக்கட்டும்.