சென்னை, அக். 26- சட்டத்தால் தமிழை அழிக்கப் பார்க் கிறார்கள். அதனைத் தடுக்க தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளு வர் கோட்டத்தில் புதனன்று (அக். 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வைரமுத்து பேசுகையில், ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்துள்ளது என்றும், இது தமிழுக்கு புதிதல்ல. 85 ஆண்டுகளாக ஒரு மொழியை திணிக்கப் பார்க்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியை அலுவலக மொழியாக கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்றும், அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்குள் தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழ் ஒரு இனத்தின் வரலாறு என்றும், தமிழ் பண்பாடு தமிழர்களின் அடை யாளம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி இந்தி மொழியால் புறந்தள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். தமிழ் மொழி பீனி க்ஸ் பறவைபோல, அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என்றார். அதோடு சட்டத்தால் தமிழை அழிக்கப்பார்க்கிறா ர்கள், இதை சரித்திரத்தாலும் அழிக்க முடி யாது, சட்டத்தாலும் அழிக்க முடியாதுஎன்றார். முந்திரிகள் இருக்கும் மூட்டைக்குள் வண்டை நுழைய விட்டால் அது முந்திரி யை அழித்துவிடும். அதேபோல் இந்தியை நுழைய விட்டால் அது தமிழ் மொழியை அழித்துவிடும். தமிழ் ஒரு இனத்தின் வர லாறு, தமிழ் பண்பாடு நமது அடை யாளம் என்றார். வேதாரண்யத்திற்கு முன்பு இருந்த பெயர் திருமறைக்காடு. திருமறைக்காடு என்று பெயர் இருந்தால் தமிழர்களின் வர லாறு அதன் சிறப்புகள் அனைத்தும் தெரி யும் என அதை மறைத்து வேதாரண்யம் என்று தெரிவித்தார்கள். 5 கோடி தமிழர் களும் தமிழை படிக்க வையுங்கள், தமிழை தெரிய வையுங்கள், தமிழை கற்றுக்கொடு ங்கள் எனக் கேட்டுக் கொண்டார். இதில் வி.ஜி.சந்தோஷம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தஞ்சை தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனை வர் ம.ராசேந்திரன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.