சிபிஎம் தொடர் போராட்டம் வெற்றி விவசாயிகளுக்கு நிரந்தரமாக பாதை கிடைத்தது
பெரம்பலூர், ஜுன் 27- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், தொண்ட மந்துறை ஊராட்சி, அய்யர்பாளையம்-செம்மண் குட்டை இடையே, 80 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை, திடீரென ஒருதனி நபரால் தடுத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் செல்வதற்கும் வாகனங்கள் விவ சாயப் பொருட்களைக் கொண்டு செல்வ தற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அய்யர்பாளையம் கிளைச் செயலாளர் பெரியசாமி தலைமையில், உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஜுன் 2 அன்று, ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி மனு கொடுக்கப் பட்டது. பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சாமி. நடராஜன் தலைமையில் ஜுன் 8 அன்று, பாதையை மீட்டெடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வேப்பந்தட்டை வட்டாட்சியர் தலைமையில், அலுவலகத்தில் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்பட்டது. ஆனால் எதிர் தரப்பு மீண்டும் பிரச்சனை செய்ததால், வட்டாட்சியர் தலைமையில் எதிர் தரப்பிற்கு முறையாக கடிதம் அனுப்பி, வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிரந்தரமான பொதுபாதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் உருவாக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணப்பட்டது. இதற்கு அய்யர்பாளையம் கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அரசு அலு வலர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.