tamilnadu

img

சென்னைக்கு ஏசி மின்ரயில் தயாரிக்க திட்டம்

சென்னை,நவ.9- சென்னைக்கு ஒதுக்கப்பட்ட ஏசி புறநகர் மின்சார ரயில் தயாரிக்கும் பணியை அடுத்த நிதியாண்டில் (2025-26-ம் நிதியாண்டில்) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐ.சி.எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறுகையில் , “சென்னை ஐ.சி.எஃப்-ல் தற்போது நவீன வகையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணியும் நடைபெறுகிறது. இது, வந்தே பாரத் போல இருப்பதால், ரயிலில் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை  எளிதாக சென்று வர இயலும். அதிகபட்சமாக, மணிக்கு 110  கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் உடையது. தானியங்கி கதவு கள், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகளும் உள்ளன. அனைத்துப் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இந்த வகை ஏசி மின்சார ரயில்கள் அதிகளவில் தயாரிக்கப்பட வில்லை. சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு ஏசி ரயில்களை தயாரிக்கும் பணியை அடுத்த நிதியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.