tamilnadu

img

3 லட்சத்து 38 ஆயிரத்து 390 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ள திட்டம்

தஞ்சாவூர், மே 28 -  காவிரி டெல்டா மாவட் டங்களுக்கு, பாசனத்திற் காக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று மேட்டூர் அணை யிலிருந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை மாலை கல்லணைக்கு வந்து சேர்ந்தது.  இதையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக வெள்ளிக் கிழமை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரால் காவிரி, வெண் ணாறு, கல்லணைக் கால் வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது பின்னர் அமைச்சர்கள் தெரிவித்ததாவது:  கல்லணையில் இருந்து, திறந்து விடப்படும் தண்ணீர் மூலம், 

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 150 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 93 ஆயிரத்து 860 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 760 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 86 ஆயிரத்து 450 ஏக்கர், கடலூர் மாவட் டத்தில் 24 ஆயிரத்து 700  ஏக்கர், அரியலூர் மாவட்டத் தில் 2 ஆயிரத்து 470 ஏக்கர் என மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரத்து 390 ஏக்கர் பரப்ப ளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.  நடப்பாண்டில் (2022- 23) கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சை, திருவா ரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடி கால்களில் ரூபாய் 4540.04 லட்சம் மதிப்பில், சுமார் 3  ஆயிரத்து 753.08 கிலோ மீட்டர் நீளத்திற்கு சிறப்பு திட்ட நிதியின் கீழ், தூர்வா ரும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, எதிர்பார்க்கும்  மழை,மேலும் கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக் கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப் பாசனம் நடை முறைப்படுத்தப்படும்.  வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறையின் கருத்துக்களை கேட்டறிந்து நீர் பங்கீடு மேற்கொள்ளப் படும். பாசனத்திற்கு வழங்கப் படும் நீரினை சிக்கனமாக வும், தேவைக்கேற்ப விவசா யப் பெருங்குடி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் வினாடிக்கு 500 கன அடி வீதமும், கல்ல ணைக் கால்வாயில் வினாடி க்கு 100 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படு கிறது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 118.040 அடியாகவும், நீர் இருப்பு 90.377 அடியாக உள்ளது.  அணையில் இருக்கும் தண்ணீரை கொண்டு பாச னத்திற்கு தங்கு தடையின்றி வழங்க வேண்டிய நிலை உள்ளதால், நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடு செய்யப்படும். பருவமழை க்கு ஏற்ப நீர் பங்கீடு மாற்றி அமைக்கப்படும்.  நீரினை சிக்கனமாக பயன் படுத்தி நீர்வளத் துறை அலுவ லர்களுடன் நீர் பங்கீட்டிற்கு இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.”  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.