ரூ.500 கோடி முதலீட்டில் ஓசூரில் பெஸ்டோ நிறுவனம்
ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! சென்னை, ஜூன் 7 - தமிழ்நாடு அரசும், ஜெர்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனமும் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஓசூரில் ரூ.500 கோடியில் தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனத்தை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்து, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் பெஸ்டோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்கு நர்கள் ரஷ்மிகாந்த் ஜோஷி, ரவி சாஸ்த்ரி மற்றும் மோகன்குமார் ஆகி யோர் தெரிவிக்கையில், “தொழில் சார்ந்த தானியங்கி நுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் உலகளா விய முன்னணிக் குழுமமான பெஸ்டோ, அதன் நூற்றாண்டு விழா வைக் குறிப்பிடும் வகையில், தமிழ் நாட்டில் ஓசூரில் உலகத் தரத்தி லான உற்பத்தி நிறுவனத்தை திறந்து உள்ளது. தானியக்கமும், கல்வியும் எனும் துறைகளில் புதுமை, சிறப்புத் திறன் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பெஸ்டோ கடந்த நூற்றாண்டாக அர்ப்பணிப்பை அளித்து வருகிறது. இந்த புதிய தொழிற்சாலை ரூ.500 கோடி மூலதன முதலீட்டில் ஓசூர் அருகே பைரமங்கலத்தில் சுமார் 75 ஏக்கரில் தொழில் நிறுவனத்தை அமைத்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலக சந்தைகளுக்கான மிகத் துல்லியமான தானியங்கி தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பெஸ்டோ உற்பத்தித் திறன்களை மேம்ப டுத்தும் நோக்குடன் வடிவமைக் கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில், தொடக்கத்திலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளது. மறைமுகமாக, மேலும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக் கும். மேலும் வருங்காலங்களில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் போது பணியாளர்களின் எண் ணிக்கை அதிகரிக்கப்படும். சர்வ தேச தரத்திற்கேற்ப நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த நிறு வனம் உயர்தர நியூமாடிக் தானி யங்கி பொருள்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும். இங்கு உற்பத்தி செய்யும் மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரா னிக்ஸ், தானியங்கி பொருள்களை உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப் பாக அமெரிக்கா, ஜெர்மனி, தென் ஆப்பிரக்கா, அங்கேரி, சீனா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். கர்நாடக மாநி லத்தில் இடநெருக்கடி காரணமாக ஓசூரில் புதிய தொழிற்சாலையை அமைத்து அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்” என்றார். பெங்களூருவில் இருந்து தமிழ் நாட்டு எல்லையில் உள்ள ஓசூரை நோக்கி வரும் பல நிறுவனங்களில் ஜெர்மனி நிறுவனமான பெஸ்டோ நிறுவனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.