தேனி, ஜன.9- பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெரி யகுளம் சில்வர் ஜூப்லி அணி வெற்றி பெற்றுள்ளது. பெரியகுளம் சில்வர் ஜூப்லி விளை யாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற போட்டி யில் 15- வயதிற்கு உட்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியகுளம் சில்வர் ஜூப்லி விளை யாட்டு கழகம், வடுகபட்டி கூடைப் பந்து கழ கம், போடி கூடைப் பந்து கழகம், கம்பம் பென்னிகுவிக் கூடைப்பந்து கழகம், ஜெய ராஜ் அன்னபாக்கியம், போடி கூடைப்பந்து கழகம் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடை பெற்ற போட்டியின் இறுதியில், பெரிய குளம் சில்வர் ஜூப்லி விளையாட்டு கழக அணி 71:49 என்ற புள்ளி கணக்கில் வடுக பட்டி அணியை வென்று முதலிடம் பெற்றது. இரண்டாவது இடத்தை வடுகபட்டி அணியும், மூன்றாம் இடத்தை கம்பம் பென்னிகுவிக் அணியும், நான்காம் இடத்தை போடி அணியும் பெற்றது. மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டி யில், பெரியகுளம் சில்வர் ஜூப்லி விளை யாட்டுக்கழகம், தாமரைக்குளம் ஜெய ராஜ் அன்னபாக்கியம் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றன. பரிசளிப்பு விழாவிற்கு பெரியகுளம் சில்வர் ஜூப்லி விளையாட்டுக் கழக துணைத் தலைவர் அபுதாஹிர் தலைமை வகித்தார், மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சிதம்பரசூரியவேலு வரவேற்றார்.துணைத் தலைவர் பாட்ஷா பரிசுகளை வழங்கினார்.