tamilnadu

img

நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் மாணவர்களுடன் பெரம்பலூர் ஆட்சியர் நடைபயிற்சி

நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்  மாணவர்களுடன் பெரம்பலூர் ஆட்சியர் நடைபயிற்சி

பெரம்பலூர், ஜுன் 1-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுவர் பூங்கா அருகே, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், நடை பயிற்சியாளர்களின் நடைபயணத்தை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பின்னர், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் நடைபயிற்சி மேற்கொள்வதன் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நடைபயிற்சியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுவர் பூங்கா அருகில் தொடங்கி, விளையாட்டு மைதானம் வழியாக மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுப்பாதையை அடைந்து, பின்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வளைவு வரை சென்று மீண்டும் சுற்றுப்பாதை வழியாக தேசிய நெடுஞ்சாலை வரை சென்று திரும்பி, சிறுவர் பூங்காவை சென்றடைந்தது. இது சுமார் 8 கி.மீ தொலைவு ஆகும். நடைபயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு 2 இடங்களில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவிற்கான பரிசோதனை செய்யப்பட்டது. நடை பயிற்சியின்போது ஏற்படும் வறட்சியை ஈடு செய்யும் வகையில் 3 இடங்களில் நடை பயிற்சியாளர்களுக்கு மாவட்ட சுகாதரத் துறையின் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நடைபயிற்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.எம். கீதா, இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.