மகாராஜா சமுத்திரத்தில் 100 ஆண்டுக்கும் மேலாக வசிப்போரை வெளியேற்றக் கூடாது!
முதலமைச்சரிடம் சிபிஎம் எம்எல்ஏக்கள் கடிதம்
பட்டுக்கோட்டை தாலுகா, மகாராஜா சமுத்திரத்தில், இனாம் ஒழிப்புச் சட்டத்தின் படி அரசுடைமையாக்கப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வாழும் 10 ஆயிரம் குடும் பங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் சிபிஎம் எம்எல்ஏ-க்கள் கடிதம் அளித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலினை, சிபிஎம் சட்ட மன்றக் குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி, துணைத் தலைவர் எம். சின்னதுரை ஆகியோர் சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத் தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மகாராஜா சமுத்திரத்தில் நாகோஜி ராமச்சந்திர சிவாஜி கடக ராவ் சாகிப் என்ற ஜமீன்தாரிடம் இருந்த சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம், 1963-ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் படி அரசுடமையாக்கப்பட்டது. மேலும், அதற்கான அரசாணைகள் வெளி யிடப்பட்டன. அன்றைய ஜமீன்தாருக்கு இழப்பீடாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் தற்போது வரைக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டியும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் அனுபவத்தில் இருக்கும் நிலத்திற்கு உரிமைச் சான்று மற்றும் பட்டாவும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், நாகோஜி ராமச்சந்திர சிவாஜி கடக ராவ் சாகிப் என்பவர் இனாம் ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மூன்று நீதிபதி கள் அமர்வு, நிலத்தை அரசு எடுத்து செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், நாகோஜி ராமச்சந்திர சிவாஜி கடக ராவ் சாகிப் என்பவர், அவருடைய வாரிசு ஆனந்தகுமார் என்பவர் இவை அனைத்தை யும் மறைத்து கீழமை நீதிமன்றத்தில் இறந்த வர்களின் பெயரில், இல்லாதவர்களின் பெயரில் உண்மைக்கு மாறாக வழக்கு தொடுத் துள்ளார். மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு பெற்று அதை அமல்படுத்துகிறேன் என்கிற போர்வையில் மக்களை வெளியேற்ற முயற்சிக்கிறார். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர், கரு ணையுடன் பரிசீலித்து சுமார் 100 ஆண்டுகளுக் கும் மேலாக குடியிருந்தும், விவசாயம் செய்தும் வரக்கூடிய மக்களைப் பாதுகாப்ப தற்கு, அவர்களின் நிலம் மற்றும் குடி மனைப்பட்டாவை உறுதிப்படுத்த வேண்டும்.
\இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், “நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போதும், எம். சின்னத்துரை எம்எல்ஏ பேசுகையில், மகாராஜா சமுத்திரம் வருவாய் கிராமத்தில் வாழ்ந்து வரும் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங் களை வெளியேற்றி, அந்த நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக் கிறார். எனவே, சிறப்பு சட்டத் திருத்தம் கொண்டு வந்து அந்த மக்களை பாதுகாக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.