முடுக்குப்பட்டி பகுதி மக்கள் திருச்சி மேயரிடம் மனு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்தி ரன் தலைமையில் முடுக்குப்பட்டி பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு மனு கொடுக்க புதனன்று வந்தனர். பின்னர் சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலா ளர் கோவி. வெற்றிச் செல்வம், பகுதி செய லாளர் விஜயேந்திரன், முடுக்குப்பட்டி கிளை செயலாளர் கணேசன், மூத்த தோழர் ராம தாஸ் மற்றும் பொதுமக்கள் மேயர் அன்பழ கனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “49 ஆவது வார்டுக்கு உட்பட்ட முடுக்குப்பட்டி பகுதியில் நான்கு தலைமுறையாகவும் 80 வருடங்களாகவும் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதி, குடிதண்ணீர், மின் விளக்கு, பாதாளச் சாக்கடை, சாலை வசதி மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். குறிப்பாக நாங்கள் குடியிருக்கும் வீடு களுக்கு மாநகராட்சியால் முறையான வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும்” எனக் கூறப் பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மேயர் அன்பழகன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.