ஒருமுறை மட்டுமே வழங்கிய நிவாரண தொகை பெரும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் - ஜெ.பொன்மாறன்
ஒரு நோய்க் கிருமி உலகையே இன்றைக்கு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. சாமானிய மக்கள் தங்களுடைய பொருளாதாரத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையில் வாழ்வா, சாவா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் உதவியோ, இன்றளவும் மக்களுக்கு பற்றாக் குறைதான். ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமை யல் எண்ணெய் தவிர்த்து அரிசி மக்கள் சமைத்து சாப்பிட முடியாத நிலைதான். தன்னார்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என்று பலரும் உதவிகள் செய்கிறார்கள், ஆனால் அந்த உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தினசரி பால், காய்கறிகள், அத்தியாவசிய தேவைகளுக்கு என்று குறைந்தபட்சம் 100 ரூபாய் மக்களுக்கு தேவைப்படுகின்றது. மார்ச் 25 ஆம் தேதிக்குப்பின் ஒரு வாரகாலம் மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்த கொள்ள முடிந்ததே தவிர அதற்கு பின் வந்த நாட்கள் பெரும் சோதனைகள்தான். அரசு சொல்லிவிட்டது என்று எந்த வீட்டு உரிமை யாளரும் வீட்டு வாடகை வாங்காமல் இல்லை.
இரண்டு மாதங்களாக எந்த வருமானமும் இன்றி குறைந்தபட்ச வாடகை கூட கொடுக்கமுடி யாத நிலையில்தான் மக்கள் உள்ளார்கள். ஆனால் அரசு கூறுகின்றது குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டோம், ரேஷன் பொருட்கள் கொடுத்து விட்டோம் மக்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்று. ஆனால் ஊரடங்கு உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டவுடன் மக்கள் அடகுக்கடையினை தேடி கடை திறக்குமுன் மிகுந்த கவலையுடன் கூட்டமாக காத்துக் கிடக்கின்றார்கள். வீட்டு உரிமையாளர் வாடகை கேட்கின்றார், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் வட்டி கட்டச் சொல்லி பணம் கேட்கின்றார்கள். இதுபோல் பல்வேறு பண பிரச்சனைகள் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப் பட்டவுடன் மக்கள் அடகு கடை, வட்டிக்கடை என்று கடன் வாங்குவதற்கு ஏறி இறங்கும் சூழ் நிலைதான் மக்களிடம் தற்போது உள்ளது.
அரசோ கடந்த ஒன்றரை மாதத்தில் நோய் தொற்றை குறைத்துவிடும் என்று பார்த்தால் நாளுக்குநாள் அது அதிகரித்து கொண்டுதான் உள்ளது. அரசால் முன் யோசனையின்றி அறி விக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நோய் தொற்று, பொருளாதார நெருக்கடி என்று அனைத்து வகையிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி யுள்ளது. அருகில் உள்ள கேரள மாநிலம் மக்களுக்கு தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளை செய்து கொரோனா நோய் தொற்றில் இருந்து எப்படி மக்களை பாதுகாத்திட வேண்டும் என்று ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அது இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டு மாநில மாக உள்ளது. எதிர்க் கட்சிகள் கூட பாராட்டக் கூடிய அளவிற்கு பேரிடர் கால நிவாரணம், 14 வகையான ரேஷன் பொருட்கள் வீடு களுக்கே சென்று கொடுப்பது, வெளி மாநில மக் களை போதிய பாதுகாப்புடன் அவர்களுடைய மாநிலத்திற்கு அனுப்பி வைப்பது என்று தொட ர்ந்து அந்த பணிகளை மட்டுமே செய்துள்ளது.
தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை யினை எப்படி திறப்பது, அன்றாட தேவை களுக்கு என்று வரும் மக்களிடம் காவல்துறை யினர் மூலம் எவ்வளவு அபராதம் விதிப்பது என்று மட்டுமே யோசிக்கின்றது. ஒருமுறை ஆயிரம் நிவாரணம் கொடுத்த அரசு அடுத்து அதைப்பற்றி வாய் திறக்க வில்லை, தினசரி அம்மா உணவகங்களில் மூன்று வேளை இலவச உணவு வழங்கப்படு கின்றது என்று கூறும் அரசு தமிழகத்தில் 7 கோடி மக்களில் தினசரி அன்றாட தேவைகள் பூர்த்தி யாகாமல் 80 சதவீதம் மக்கள் உள்ளார்கள். இது ஒரு அவசர நிலை காலமோ அல்லது போர்ப் பதற்றத்தால் ஏற்பட்ட ஊரடங்கோ கிடையாது. ஒரு நோய்த் தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கு. எனவே அதற்கு தேவையான முன் ஏற்பாடுகள், தொடர்ந்து இத்தனை நாட்கள் இந்த ஊரடங்கு இருக்கும் என்று அறிவிப்பு செய்வதற்குமுன் மக்கள் தேவைகளை முடிந்த அளவிற்கு பூர்த்தி செய்திருந்தால் மக்கள் இன்றைக்கு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை சற்று குறைந்திருக்கும்.
தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு என்று வட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள். நடுத்தர மக்க ளால் குருவி சேர்ப்பதுபோல் சேர்க்கப்பட்ட தங்கங்கள் இன்றைக்கு அடகுக்கடைக்கு செல்லும் நிலை குறைந்திருக்கும். அரசுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி வந்தால் அதை சமாளிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஒரு குடும்பத்திற்கு நெருக்கடி வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது?