tamilnadu

img

திருச்சி மாநகரில் 140 மையங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சபை

திருச்சிராப்பள்ளி, நவ.27- திருச்சி மாநகரின் 65  வார்டுகள் மற்றும் மணிகண்  டம், அந்தநல்லூர் ஒன்றி யங்களின் 42 ஊராட்சிகளில் கடந்த நவ.13 ஆம் தேதி முதல்  நூற்றுக்கணக்கான மையங்  களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்கள் சபை  கூட்டம் நடைபெற்று வரு கிறது.  இந்த மக்கள் சபை கூட்  டங்களில் நூற்றுக்கணக் கான மக்கள் பங்கேற்று,  தாங்கள் வசிக்கும் பகுதி களின் கோரிக்கைகளை முன்  வைத்து, சபையில் விவா தித்து பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனை கள் குறித்து உரையாடி வரு கின்றனர். மக்கள் சபையில் இதுவரை சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்  கேற்றுள்ளனர். குடிநீர், பொதுக் கழிப்  பறை, குடிமனை பட்டா,  ஆரம்ப சுகாதார நிலையத் தில் உள்ள குறைபாடுகள், அரசு பள்ளிகளில் மாணவ,  மாணவிகளுக்கு கழிப்பறை கள், தேவையான வகுப்  பறை, ஆய்வகம் விளை யாட்டு மைதானம், சாலை,  தெருவிளக்கு, கிராமப் புறங்  களில் நூறு நாள் வேலை திட்ட குளறுபடிகள், பேருந்து வசதி, பாசன வசதி, கூட்டு றவு கடன், குளம், ஏரி, வரத்து வாய்க்கால் தூர்வாறு தல் உள்ளிட்ட பிரச்சனை களும், மாநகர் மாவட்டம் முழுவதும் நிறுத்தப்பட்ட முதியோர், விதவை உதவித்  தொகை, பல ரேசன் கடை களில் தற்போது ஏற்பட்டுள்ள முறைகேடு குளறுபடிகளும் கோரிக்கையாக முன் வந் தன. மக்கள் சபை நடந்த எல்லா இடங்களிலும் பொது மக்கள் நம்பிக்கையோடு கலந்து கொண்டு கோரிக்கை களை முன்வைத்து வரு கிறார்கள். டிசம்பர் 5 ஆம் தேதி வரை தொடர்ந்து மக்  கள் சபை நடைபெற உள் ளது. இந்த மக்கள் சபைகளில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்  டியன், திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு, மாவட் டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலா ளர்கள் பங்கேற்று வருகின்ற னர்.