பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப்.22 - பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி செவ்வாயன்று (ஏப்.22) சென்னையில் உள்ள கருவூல ஆணையர் அலுவலக வளாகத்தில் அரசுத்துறை ஓய்வூதி யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும். பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூ தியத்தை ஆய்வு செய்ய அமைக் கப்பட்ட குழுவை கலைக்க வேண்டும். 70 வயதடைந்தவர் களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், வனத்துறையினர், ஊராட்சி எழுத்தர் உள்ளடக்கிய அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரம் 850 ரூபாயை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி முழுத் தொகையையும் வழங்க வேண் டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் கூறுகையில், “காவல்துறையின் பல்வேறு வகையான தடையை மீறி இந்த போராட்டம் நடைபெறு கிறது. முதலமைச்சர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றாவிடில், அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து போராடுவோம்” என்றார். இந்தப் போராட்டத்தில் சங்கத் தின் பொதுச் செயலாளர் பி.கிரு ஷ்ணமூர்த்தி, பொருளாளர் ந. ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் கி.இளமாறன் உள்ளிட்ட பலர் பேசினர்.