tamilnadu

பட்ஜெட் ஏமாற்றம்: சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் போராட்ட அறிவிப்பு

சென்னை, மார்ச் 22 - தமிழக நிதிநிலை அறிக்கையில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வூதியம் அறிவிக்கப்பட வில்லை. இதனை கண்டித்து மானியக்கோரிக்கை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் நா. நாராயணன், பொதுச் செயலாளர் இ.மாயமலை ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்துணவு பொறுப்பாளர், சமையலர், உதவியாளர் முறையே 700, 600, 500 ரூபாய் என சிறப்பு ஓய்வூதியம் அறி விக்கப்பட்டது. கடந்த10 ஆண்டுகளில் மூன்று முறை உயர்வு அளித்தும் 2 ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்கே ஓய்வூதி யம் உள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் முறையான ஓய்வூதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி சமூக நலத்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்பின், முறையான ஓய்வூதியம் வழங்கிடக் கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அரசுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், நிதிநிலை அறிக்கையில் முறையான ஓய்வூதி யம் குறித்த அறிவிப்பு இல்லாதது கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உருவாக்கியுள்ளது. எனவே, ஓய்வூதியம் சார்ந்த மானியக் கோரிக்கை தினத்தன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதுதொடர்பாக சமூக நல இணை இயக்குநர் ரேவதியை சந்தித்து மனு அளித்துள்ளோம். இந்த கூட்டத்தி லேயே முறையான ஓய்வூதியம் வழங்குவதற்கான அறி விப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கி றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.