tamilnadu

img

தையல் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க ஜூலை 9 வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு

தையல் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க ஜூலை 9 வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு

தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளன மாநில குழு முடிவு

இராமநாதபுரம், ஜூன் 10 - இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத் தில் தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மே ளனம் மாநில குழுக் கூட்டம் தலைவர் பி.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.தன லட்சுமி, பொதுச் செயலாளர் எம்.ஐடா  ஹெலன், பொருளாளர் ஆர்.மாலதி, துணைப் பொதுச் செயலாளர் சி.மாரிக் கண்ணு, சம்மேளன நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  தையல் தொழிலாளர்கள் வாழ்வு என்பது  கேள்விக்குறியாக உள்ளது. கார்மெண்ட்ஸ்  தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப் படுகிறார்கள். எட்டு மணிநேர வேலை என்பது  12 மணி நேரமாக மாற்றப்பட்டு உள்ளது. தையல் தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்கள், தொழில் கருவிகள் விலை உயர்வாலும், ஜிஎஸ்டி வரியாலும் தொழி லாளிகள் பாதிக்கப்படுகிறார்கள்.     எனவே தையல் தொழிலாளர்கள் நலனை  பாதுகாக்கும் வகையில் ஜூலை 9 அன்று  நடைபெறும் அகில இந்திய பொது வேலை  நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய தமிழ்நாடு முழுவதும் தையல் கடைகளை அடைத்து, மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வது என தையல் சம்மேளன  குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. சங்கத்தின் 7 ஆவது மாநில மாநாட்டை 2025 ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் புதுக்கோட் டையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.