கோப்பை வழங்கும் நிகழ்வை புறக்கணித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
9ஆவது சீசன் மினி உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3ஆவது முறை யாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இந்திய அணிக்கு கோப்பை கொடுக்கும் நிகழ்வை பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம் புறக்கணித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோப்பை கொடுக்கும் நிகழ்வின் போது மினி உலகக்கோப்பை தொடரின் இயக்கு நரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலை மை நிர்வாக அதிகாரியுமான சுமைர் அக மது துபாய் மைதானத்தில் தான் இருந்தார். ஆனால் கோப்பை கொடுக்கும் நிகழ்விற்கு அவர் வரவில்லை. அழைப்பு விடுக்காததால் அவர் விழாவிற்கு செல்ல வில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் உள்துறை அமைச்ச ரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலை வருமான மொஹ்சின் நக்வி அரசு சார்ந்த பணி இருப்பதால் இறுதிப் போட்டி நடைபெறும் துபாய் நகரத்திற்கு வர இயலாது என முன்பே அறிவித்தார்.
அதனால் இறுதிப்போட்டி மற்றும் கோப்பை வழங்கும் விழாவில் பாகிஸ்தா னை பிரதிநிதித்துவப்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி சுமைர் அகமதுவை அனுப்பி வைத்தது பாகிஸ்தான் அரசு. ஆனால் அவர் கோப்பை வழங்கும் நிகழ்வை புறக்கணித்ததால் உலகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஜெய் ஷாவுக்கும் சிக்கல்? இந்திய அணிக்கு மினி உலகக் கோப்பையை சர்வதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் (ஐசிசி) ஜெய் ஷா மட்டுமே (பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செய லாளர் தேவஜித் சைகியா மற்ற நிகழ்வில் இருந்தனர்) வழங்கினார். இந்திய அணி வீரர்களை தவிர வேறு யாரும் அவருடன் இல்லை. கோப்பை கொடுக்கும் நிகழ்வி ற்கு தனக்கு அழைப்பு விடுக்காததால் அங்கு செல்லவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி சுமைர் அகமது குற்றம் சாட்டி யுள்ளதாக செய்திகள் வெளியாகியுள் ளன. ஒருவேளை ஐசிசி தலைவர் ஜெய் ஷா, சுமைர் அகமதுவுக்கு அழைப்பு விடுக்காமல் இருந்தால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதிக்கக் கூடிய செய்தியாக மாறும் என கிரிக்கெட் வல்லு நர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து வீரர் ஹாரிக்கு 2 ஆண்டுகள் தடை?
இங்கிலாந்து நாட்டின் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் தில்லி அணிக் காக விளையாட இருந்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடங்க இன்னும் 11 நாட்களே உள்ள நிலை யில், தில்லி அணியுடனான ஒப்பந் தத்தை ஹாரி ப்ரூக் திடீரென ரத்து செய் துள்ளார்.இதுதொடர் பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “வர விருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து விலக மிகவும் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். தில்லி கேபிடல்ஸ் மற்றும் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என ஹாரி பதிவிட்டுள்ளார்.
இதனால் ஹாரி ப்ரூக்கிற்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகள் ஐபிஎல் தடை விதிக்கப்படலாம் என செய்திகள் வெளி யாகியுள்ளன. 2025ஆம் ஆண்டு சீச னுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஹாரி ப்ரூக்கை ரூ.6.25 கோடிக்கு தில்லி அணி ஏலம் எடுத்தது என்பது குறிப் பிடத்தக்கது.