தஞ்சாவூர், பிப்.10- டெல்டா மாவட்டங்களில் அறு வடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள், பருவம் தவறி பெய்த மழையால், சுமார் 2.30 லட்சம் ஏக்கர் பாதிப்புக்கு உள்ளாகின. நெற்பயிர் களின் நிலையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட மத்தியக் குழு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குழுவின் ஒருங்கிணைப் பாளரான பிரபாகரன் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் குழு, உறுப்பினர்களான சி.யூனுஸ் மற்றும் ஒய்.போயா ஆகியோர், நாகப்பட்டி னம் மாவட்டத்தில் உள்ள திருக் குவளை, வலிவலம் மற்றும் பிற பகுதி களுக்கு ஆய்வுக்காகச் சென்றனர். அறுவடை செய்யப்பட்ட நெற் பயிர் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்களையும் பார்வை யிட்டனர். நாகப்பட்டினம் ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் மாவட்ட அளவிலான வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினருடன் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள தலைஞாயிறு நேரடி கொள்முதல் மையத்திற்கு சென்று நெல்லை சேக ரித்தனர். ஈரப்பதத்தை ஆய்வு செய்து அதன் மாதிரிகளையும் சேகரித்தனர். இந்த ஆய்வின் போது, அப்பகுதி விவசாயிகள், அறுவடைக்குத் தயா ராக உள்ள நிலையில், 22 சதவீதம் ஈரப்பதம் கொண்ட சம்பா நெல்லை கொள்முதல் செய்யுமாறு மத்திய குழு வினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அழுகிய நெற் பயிர்களையும் குழுவினரிடம் காட்டினர்.
மயிலாடுதுறைக்குச் சென்ற குழுவினர், குத்தாலம் தாலுகாவில் மங்கைநல்லூர், செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை தாலுகாவில் மழையினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மதிப்பீடு செய்து, விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். மேலும் பரசலூரில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல்லில் உள்ள ஈரப்பதத்தை ஆய்வுக்குழு அளவீடு செய்தது. ஆய்வு குறித்து, மயிலாடுதுறை ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கூறுகை யில், பருவமழையால் மாவட்டத்தில் 68,565 ஹெக்டேர் சாகுபடி பரப்பில் 13,714 ஹெக்டேரில் நெற்பயிர் பாதிக்கப் பட்டுள்ளது. கொள்முதல்நிலையங் களில் சேமித்து வைக்கப்பட்ட நெல்லின் ஈரப்பதம் 19 முதல் 24 சதவீதம் வரை இருந்தது. மாவட்டத்தில் இதுவரை 38 ஆயிரத்து 545 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பருவத்தில் மேலும் 1.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக்கூறினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்தியக்குழு வியாழனன்று ஆய்வு செய்தது. குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வந்திருந்தார். இக்குழுவினர் தஞ்சாவூர் அருகே அருள்மொழிப்பேட்டையில் நெல் மாதிரிகளை ஆய்வு செய்து சேகரித்தனர். அப்போது வழக்கறி ஞர் வெ.ஜீவகுமார் உள்ளிட்ட விவ சாயிகள் ஈரப்பதத்தின் சதவீதத்தை உயர்த்தவேண்டுமென ஆய்வுக்குழு வினரை வலியுறுத்தினர். தொடர்ந்து ஒரத்தநாடு தாலுகா பொய்யுண்டார் குடிக்காடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை தாலுகா அலிவலம், பில்லங்குழி ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங் களிலும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
புவி வெப்பமயமாதல் பிரச்சனை யால் நாட்டில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள். ஒன்றிய அரசு நெல் கொள்முதலில் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
திருவாரூர்
திருவாரூர் ஒன்றியத்தில் 9870 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப் பட்டுள்ள நெல்லில் பத்து சதவீதம் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள் ளது. 8,870 ஹெக்டேரில் நெல் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நிலவும் அறுவடை இயந்திரத் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ள நிலையில் மத்தியக்குழுவினர் நீடாமங்கலம் தாலுகா ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்திய மத்தியக் குழுவினர் நான்கு மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளையும் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல ஆய்வகத்தில் ஆய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்ட பாதிப்பு குறித்து ஒருங்கிணைந்த முழுமையான அறிக்கையை நுகர்வோர் விவ காரங்கள், உணவு மற்றும் பொது விநி யோக அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப் படும் என ஆய்வுக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.