tamilnadu

img

விவசாயிகள் பெயரில் மோசடியாக கடன் பெற்ற திருஆரூரான் சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்க!

தஞ்சாவூர், டிச.7 -  அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் 35 ஆவது அகில இந்திய மாநாடு  டிசம்பர் 13 முதல் 16 வரை கேரள மாநிலம்  திருச்சூரில் நடைபெற உள்ளது. இதை யொட்டி அகில இந்திய இணைச் செயலா ளர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.கே. பிரிஜா, மாநில  தலைவர் பெ.சண்முகம், மாநில பொதுச்  செயலாளர் சாமி.நடராஜன், மாநிலச் செய லாளர் எஸ்.துரைராஜ் பங்கேற்ற வெண்  மணி தியாகிகள் நினைவுச்சுடர் பயணக்  குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. தொடர்ந்து, விவசாயிகள் சங்க ஒன்றி யத் தலைவர் மெய்க்காப்பன் தலை மையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லத் தலைவர் பெ.சண்முகம் பேசியதா வது:  தஞ்சாவூருக்கு அருகில் திருமண்டங்  குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை யில், தங்களுக்கு தர வேண்டிய பாக்கி யைத் தர வேண்டும் எனக் கோரி கரும்பு விவசாயிகள் இரவு பகலாக போராடி வரு கின்றனர். விவசாயிகளுக்கு தெரியாம லேயே, அவர்களது பெயரைப் பயன் படுத்தி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களில் ஆலை நிர்வாகம் மோசடியாக பெற்றுள்ள கடன்களை விவசாயிகள் பெயரில் இருந்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையை முன்வைத்து கடந்த 7 நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

இதில், தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிச.9 ஆம் தேதி இது சம்பந்தமாக அமை திப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தி ருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். விவசாயிகளை ஏமாற்றி, விவசாயி களை வங்கிகளில் அடகு வைத்து, முறை கேடாக பல நூறு கோடிகளை வங்கி களில் கடனாக பெற்றுள்ளனர். இதில் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்ட ராம் தியா கராஜனை கைது செய்வதற்கு பதி லாக, ‘அவரை அழைத்து நாங்கள் பேச்சு வார்த்தை நடந்த போகிறோம்’ என்கின்ற னர். உடனடியாக காவல்துறை வழக்குப்  பதிவு செய்து ஆலை அதிபர் ராம் தியாக ராஜனை கைது செய்ய வேண்டும் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்துகிறது. வேளாண்மை துறை அமைச்சர் உடனே இப்பிரச்சனையில் தலையிட்டு பாக்கித் தொகையை பெற்றுத் தரவும், மோசடி செய்து கடன் பெற்றுள்ளவரை கைது செய்யவும் வேண்டும். மேலும், கடந்த ஏழு நாட்களாக போராடிக் கொண்  டிருக்கக் கூடிய விவசாயிகளின் போராட்  டத்தை முடிவுக்கு கொண்டு வர நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார்,  சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செய லாளர் எஸ்.கோவிந்தராஜ்,  வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் பாஸ்கர், பால் உற்  பத்தியாளர் சங்கம் துரைராஜ், விவசாயி கள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் தம்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.