மும்பை,ஜன.16- மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் கடந்து செல்வதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வனங்களுக்கு இடையே போடப்படும் சாலை களில் விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. விலங்குகள் சாலைகளைக் கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. இதைத் தடுக்க ஒன்றிய. மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து எடுக்கின்றன. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை நாக்பூர் நெடுஞ்சாலையில் பல விலங்குகள் சாலை விபத்தில் மரணம் அடைகின்றன. இதற்காகப் பலவித நடவடிக்கைகள் எடுத்தும் வன விலங்குகள் நெடுஞ்சாலைகளைக் கடப்பதைத் தடுக்க முடிவதில்லை. இதற்காக மகாராஷ்டிர மாநில அரசு ஒரு புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. மும்பை நாக்பூர் நெடுஞ்சாலையில் சாலைகள் சற்று கீழிறக்கப்பட்டு வனவிலங்கு கள் சாலைகளுக்கு வர முடியாத படி தடை செய்தது. விலங்குகள் சாலைகளைக் கடக்க வசதியாக அங்கு வனவிலங்குகள் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.