எங்கள் பள்ளி ஓர் நல்ல பள்ளி
எல்லாமே சொல்லித் தந்த எங்கள் பள்ளி
எண்ணும் எழுத்தும் நம் இரு கண்கள்
என சொல்லித் தந்த எங்கள் பள்ளி
ஒழுக்கம் என்பது உயிரினும் உயர்ந்ததாகும்
என சொல்லித் தந்த பள்ளி... அது எங்கள் பள்ளி
பாரதியாரும் திருவள்ளுவரும்
நம் சொந்தங்கள் எனவும்
சொல்லித் தந்த எங்கள் பள்ளி
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
என சொல்லித் தந்த பள்ளி... அது எங்கள் பள்ளி
சாதிகள் இல்லையடி பாப்பா மற்றும்
தீண்டாமை குற்றமாகும் பாப்பா
என சொல்லித் தந்த எங்கள் பள்ளி
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாகும்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
என சொல்லித் தந்த பள்ளி... அது எங்கள் பள்ளி
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவாகும் - என
சொல்லித் தந்த பள்ளி... அதுவும் எங்கள் பள்ளி.