tamilnadu

img

எங்கள் மருத்துவ பலம் அதிகரித்துள்ளது

காரகஸ், மார்ச் 8- சீனாவிடமிருந்து டன் கணக் கில் வந்திறங்கியுள்ள மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்து களால் தங்களின் பலம் அதி கரித்துள்ளதாக வெனிசுலா தெரி வித்துள்ளது. சீனாவில் இருந்து 69 டன்  எடையுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் வெனிசுலா விற்கு வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் சீனாவுடன் வான்வழி போக்குவரத்தை வெனிசுலா அதிகப்படுத்தியது. அதோடு மருத்துவம் தொடர் பான பணிகளுக்கு வான்வழிப் போக்குவரத்திற்கு எந்தத் தடை ஏற்பட்டாலும் அதை உடனுக்கு டன் சரிசெய்து வந்தனர். மருந்து கள் மற்றும் கருவிகளை சீனா விலிருந்து வாங்குவது பற்றியும் பல்வேறு உடன்பாடுகள் எட்டப் பட்டன. இந்த உடன்பாடுகளின் அடிப்படையில் இதுவரையில் 42 முறை சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. உயிர் காக்கும் மற்றும் தொற்றை எதிர் கொள்ள உதவும் மருந்துகள்,

பல்வேறு வகையான மருத்து வக் கருவிகள் ஆகியவை வெனி சுலாவில் வந்திறங்கின. இந்த இறக்குமதி  குறித்துக் கருத்து தெரிவித்த சமூகப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் குட்ட ரெஸ், “கொரோனா மற்றும் பிற தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறை யில் சிகிச்சை அளிக்க இந்த மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் பணியாளர்களுக்குப் பெரும் அளவில் உதவும்” என்று  குறிப்பிட்டுள்ளார். மார்ச் 2021ல் 1 கோடி  முகக்கவசங்கள், ஒருமுறை பயன்படுத்தும் 16 லட்சம் கை யுறைகள், தெர்மோமீட்டர்கள், 50 ஆக்சிஜன் உற்பத்திக் கரு விகள் உள்ளிட்டவற்றை ஒரு கப்ப லில் சீனா அனுப்பி வைத்தது. இது பெரும் அளவில் உதவிகரமாக இருந்தது என்று வெனிசுலா மருத்துவத் துறையினர் தெரி விக்கிறார்கள்.

இது பற்றிக் கருத்து தெரிவித்த வெனிசுலா வின் சுகாதாரத்துறை அதிகாரி கார்லோஸ் ஆல்வரடோ, “சட்ட விரோத அமெரிக்கப் பொருளா தாரத் தடைகள் இருக்கும் நிலையில் சீனாவிடமிருந்து உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பது பெரும் அளவில் பயனுள்ளதாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் எங்கள் மக்க ளுக்குக் கிடைக்கக்கூடாது என் பதில் அமெரிக்கா குறியாக இருக் கிறது. அதை சீனாவின் உதவி தகர்த்தெறிந்துள்ளது”என்கிறார். சீனாவுடனான ஒத்துழைப்பு எனது நிர்வாகத்திற்கு முன்னுரி மை என்று வெனிசுலா ஜனாதி பதி நிகோலஸ் மதுரோ குறிப் பிட்டுள்ளார். பொதுவான சவால்களை எதிர்கொள்ள சீனாவுடனான உறவை மேம் படுத்துவோம் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.