மதுரை, செப்.8- ‘நமக்கான நிலம் தாய் நிலம் தான்’ என எழுத்தாளரும் மக்களவை உறுப்பி னருமான தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார். மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 14வது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் ‘நிலமும் நானும்’ என்ற தலைப்பில் தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினரும், கவிஞரு மான தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசி யதாவது:- தமிழ்மொழியில் பேசுவதை கௌரவக் குறைவாகக் கருதக்கூடாது. எந்த மொழியும் நமக்கு எதிரியல்ல. தாய்மொழியை தலையாய மொழி யாகக் கருதி கற்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு அனுபவத்தை கற்றுத் தர வேண்டும். வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க வேண்டும். நமக் கான நிலம் தாய்மண் தான். இருப்பி னும் விவசாயம் பொய்த்ததால் பிழைப்புத் தேடி மக்கள் வெளியேறிவருகின்றனர். நிலம் படைப்பாளிக்கு மட்டுமல்ல சாதாரண மனிதனுக்கும் ரத்தம் சதை யும் போன்றது. நிலத்தோடுதான் எப்போதும் நாம் வாழ வேண்டும். பிடி மண்ணுக்காக எத்தனையோ போராட் டங்கள் நடந்துள்ளன. மண்ணும் நில மும்தான் உலகெங்கும் மனிதர்கள் அர்த்தத்தோடு உயிர் வாழ்வதற்கான அடையாளமாகத் திகழ்கிறது. நிலம் நம்முடைய உணர்வுக்கு உயிர் தருகிற ஒரு உன்னதமான விஷ யம். உணர்வோடு கலந்துள்ள நாம் வாழ்வதற்கான அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லிச் செல்லும் வரலாறை, அதன் வளமை யை நினைத்துக்கொள்ளுங்கள். நினைத்திருப்பதோடு மட்டுமின்றி அதனை உயிர்ப்போடு அடுத்த தலை முறைக்கும் கடத்துங்கள். நமக்கான நிலம் தாய் நிலம் தான் என்றார்.