திருவாரூர், அக்.24 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநில 10-வது மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளா ட்சித்துறை ஊழியர்கள் சம்மேளன மாநில 10-வது மாநாடு திருவாரூரில் டிச.16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற வுள்ளது. இதற்கான வரவேற்பு கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமை வகித்தார். அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஏ.ஜி.சந்தானம், செய லாளர் எம்.பன்னீர்செல்வம் ஆகி யோர் உரையாற்றினர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், சிஐடியு பொறு ப்பாளருமான ஐ.வி.நாகராஜன் நிறைவுரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மாவட்டப் பொரு ளாளர் ஆர்.மாலதி, மாநிலக் குழு உறு ப்பினர் ஏ.பிரேமா உள்ளிட்டோர் பேசி னர். அமைப்பின் மாவட்டச் செயலா ளர் எம்.முரளி நன்றி கூறினார். மாநில மாநாட்டுக்கு 50 பொறு ப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தலைவராக ஐ.வி.நாகராஜன், செயலாளராக டி.முருகையன், பொருளாளர் எம்.முரளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.