tamilnadu

img

மழைத்தண்ணீர் தேங்கிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு

சென்னை,அக்.19- வடகிழக்கு பருவமழை முன்கூட்டி யே தொடங்கி இருக்கும் நிலையில், கடந்த 14 ஆம் தேதி அன்று சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதியில் கனமழை பெய்தது.  இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.  அரசின் வடி கால் ஏற்பாட்டால் மழைவெள்ளநீர் உட னடியாக வழிந்தது. சில இடங்களில் மட்டும் மழைநீர் வடிய சிறிது காலதா மதம் ஆனது. இந்த நிலையில், சென் னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் தண்ணீர் தேங் கிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி தண் ணீர் தேங்காத வாறு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்டுள்ளது.  வேளச்சேரி, பள்ளிக்கரணை, வள்ளூவர்கோட்டம் சாலை, அரும் பாக்கம், பெரம்பூர், பட்டாளம், வட பெரும்பாக்கம் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிவதில் சிக்கல் இருந்த நிலையில், அந்த பகுதி யில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தண்ணீர் தேங்கிய இடங்களில் மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல், கூடுதல் மோட்டார்களை அமைப்பது குறித்து கவனம் செலுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.