tamilnadu

img

நாடு முழுவதும் மின்ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்

சென்னை, டிச. 31 - ஒன்றிய பாஜக அரசு மின் துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது. மாநில அரசு களை நிர்பந்தப்படுத்தி மின்வா ரியங்களை சிறு சிறு கம்பெனி களாக பிரிக்க வைக்கிறது. அதன் பிறகு அவற்றை படிப்படியாக தனியார்மயமாக்கி வருகிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா, வாரணாசி ஆகிய இரு கம்பெனிகளை தனியாருக்கு விட அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.  இதனை எதிர்த்து அம்மாநி லங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் அரசுகளின் அடக்குமுறைகளை மீறி ஊழியர்கள் போராடி வரு கின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  இந்தியா முழு வதும்  மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்களை கொண்ட கூட்ட மைப்புகள் வேலை புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தின.  தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மின்வாரிய தலைமை யகம் முன்பும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் பேசிய “முதற்கட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளோம். ஜனவரி 1 முதல் சண்டிகர் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுத்துறையாக தொடரும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள தை நம்புகிறோம். ஒருவேளை மின்வாரியத்தை தனியார்மய மாக்கும் நடவடிக்கைகளை அரசு  எடுத்தால் அனைத்து தொழிற்சங்கங் களும் ஒன்றுகூடி வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 107வது மின்சார வாரியக் கூட்டத்தில் சுமார் 10ஆயிரம் பணி யிடங்களை நிரப்ப முடிவெடுக்கப் பட்டது. இதற்கு அரசு ஒப்புதல் தராமல் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்டோர் மின்விபத்தில் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் ஊன முற்றுள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு, 107வது வாரியக் கூட்டத்தில் முடிவுக்கு ஒப்புதல் தர  வேண்டும்” என்று வலியுறுத்தி னார்.