tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிறுமி கொலையா? போலீசார் விசாரணை

கடலூர், ஜூன் 18-  கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தையின் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். மாணிக்கம் மகன் பாலமுருகன் (வயது 45) மற்றும் அவரது மனைவி பச்சையம்மாள் ஆகி யோருக்கு 4 பிள்ளை கள் உள்ளனர். பாலமுரு கனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், பச்சை யம்மாளின் சித்தப்பா மகன் திண்டிவனத்தைச் சேர்ந்த ஜீவா என்பவர் ஆடூர் அகரத்துக்கு வந்து பச்சையம்மாள் மற்றும் மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊருக்கு சென்றார்.  ஜீவா பாலமுருகன் உற வினர்களை தொடர்பு கொண்டு, தன் வீட்டில் இருந்த மூன்று வயது பெண் குழந்தை இறந்து விட்டதாகவும், தாங்கள் கடலூருக்கு பேருந்தில் வரு வதாகவும் தெரிவித்தார். பச்சையம்மாள் கட லூர் உழவர் சந்தை அருகே குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த குழந்தை உடலில் காயங்க ளுடன் இறந்த நிலை யில் இருந்தது. பாலமுரு கன் உறவினர்கள் பச்சைய ம்மாளையும் ஜீவாவையும் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் குழந்தையை மீட்டு கடலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்களது குழந்தையை ஜீவா தான் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பால முருகன் உறவினர்கள் குற்றம் சாட்டினர். போலீ சார் பச்சையம்மாள் ஜீவா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி கிருஷ்ணகிரி, ஜூன் 18 -  ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு அடுத்த கதவணிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகன் மனைவி மகேஸ்வரி (25). அவர் ஜூன் 16 மாலை அந்தப்பகுதியில் இருந்த மின் கம்பியில் துணி கிடந்துள்ளதை எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மகேஸ்வரி நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தார்.

குடியிருக்கும் இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு  

கடலூர், ஜூன் 18- கடலூர் புதுப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் குடியிருக்கும் இடத்தை அறநிலையத்துறையினர் அளவீடு செய்வதற்கு பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெருமாள் என்பவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் உள்ள தனது பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கு தொடங்கினார். இந்நிலையில் அந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்றும், அதில் வீடு கட்டக்கூடாது என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தடுத்து காவல்துறையிடம் மனு கொடுத்தனர்.பெருமாளுக்கு தகவல் கொடுக்காமல் தன்னிச்சையாக இந்து சமய அறநிலையத் துறையினர் திடீரென வந்து இந்த பகுதி முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று கூறி, நில அளவீடு செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கு மேற்பட்டோர் திரண்டு வருவாய்த்துறை சர்வேயர் மூலம் அளக்க வேண்டும் என்று முறையிட்டனர். அறநிலையத்துறையின் புதுப்பாளையம் பெருமாள் கோயில் செயல் அலுவலர் சரவண ரூபன் பொதுமக்களையும், பெண்களையும், உளவுத்துறை அதிகாரிகளையையும் ஒருமையில் பேசி இழிவு படுத்தினார். இதை கண்டித்து பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்ததால் அறநிலையத்துறை அதி காரிகள் நிலத்தை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றனர்.