tamilnadu

img

திருவாரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு காய், கனி அங்காடி வளாகம் திறப்பு

திருவாரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள  ‘கலைஞர் நூற்றாண்டு காய், கனி அங்காடி வளாகம் திறப்பு

திருவாரூர், மே 11-  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருவாரூர் நகராட்சி வார்டு எண்.25 பழைய தஞ்சை சாலையில் ரூ.13.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு காய், கனி அங்காடி வளாகம்’ஐ நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியர் தவ. மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.  திருவாரூர் நகராட்சி வார்டு எண்.25 பழைய தஞ்சை சாலையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13.27 கோடி மதிப்பீட்டில் தரை தளத்தில் 176 கடைகள், முதல் தளத்தில் 48 கடைகள், இரண்டாம் தளத்தில் 7 கடைகளும் என 231 கடைகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு காய், கனி அங்காடி வளாகம்’ திறந்து வைக்கப்பட்டது.  தொடர்ந்து, திருவாரூர் நகராட்சியில் ரூ.16.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பழைய பேருந்து நிலைய மேம்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.    நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி,  நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், பணிநியமன குழு உறுப்பினர் பிரகாஷ், திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி ஆணையர் தாமோதரன், வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுலவர்கள், அனைத்து நகர்மன்றத் தலைவர்கள், அனைத்து நகராட்சி ஆணையர்கள், திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.