திருத்துறைப்பூண்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு
திருத்துறைப்பூண்டி, மே 2- திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி நகராட்சி நாகை சாலை கீழ வீதியில் புறக்காவல் நிலை யத்தை திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கரண் கரட் திறந்து வைத்தார். இதில், திருத்துறைப்பூண்டி காவல்துறை துணை கண்காணிப் பாளர் பாஸ்கரன், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஏஆர்வி நிறுவனங்களின் தலைவர் விவேக், நகர் மன்ற உறுப்பினர் எழில ரசன் மற்றும் திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்க தேடுதல் குழு அமைப்பு
தஞ்சாவூர், மே 2- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.கே. வாசுகி உள்ளிட்ட 5 பேர் கொண்ட தேடுதல் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2021 ஆம் ஆண்டு வி.திருவள்ளுவன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பணி ஓய்வு பெற 11 நாட்கள் இருந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 20 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, வி.திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு, புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய 5 பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைத்துள்ளது. இதில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி.கே.வாசுகி, முன்னாள் முதன்மைச் செயலாளர் கே.தீனபந்து, முன்னாள் பேராசிரியர் மு.செல்வம், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.தங்கராசு, காந்தி கிராமியப் பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் ச. ராசேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர், துணைவேந்தரை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்வார்கள். அந்தக் குழுவின் பரிந்துரையில் துணைவேந்தர் ஒருவரை அரசு தேர்வு செய்யும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம்
பாபநாசம், மே 2- தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் அறிவுறுத்த லின் பேரில், பாபநாசம் தீயணைப்பு நிலையம் சார்பில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம் நடைபெற்றது. பாபநாசம் அரசு மருத்துவமனையில் நடந்த முகாமில், தீயை எப்படி அணைப்பது, அடிபட்ட நபர்களை எவ்வாறு காப்பாற்று வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் செய்து காட்டப்பட்டன. பாபநாசம் தீய ணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ தடுப்பு பயிற்சியை செய்து காட்டினர். பாபநாசம் அரசு தலைமை மருத்துவர் குமரவேல், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
உரிய வயதை எட்டாத, ஓட்டுநர் உரிமம் பெறாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஓட்டாமல் இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
தஞ்சாவூர், மே 2- உரிய வயதை எட்டாத, ஓட்டுநர் உரிமம் பெறாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஓட்டாமல் இருக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: “தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது. எனவே, பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஓட்டாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் உரிய வயதை எட்டாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும், வாகனங்களை ஓட்டாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் பொதுஇடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் மற்றும் அறிவிப்பு பதாகைகள் ஒட்ட வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் வாகனங்களை கொடுக்காமல் இருக்க வேண்டும். மீறும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.