மதுரை,ஜூலை 15- தென் தமிழ்நாட்டின் அறிவாலயம் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்று முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். மதுரையில் புதுநத்தம் சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா ஜூலை 15சனிக்கிழமையன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில். நூலக வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அமைக்கப் பட்டுள்ள உருவச்சிலையையும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.நூலகத்திற்கு வருகை தந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.