tamilnadu

img

2ஆம் நிலை காவலர் தேர்வு வெறும் 3552 இடங்கள்; 3 லட்சம் பேர் எழுதினர்

சென்னை, நவ, 27- தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு துறை காவலர்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஞாயிறன்று (நவ.27) நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் 295 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 3 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.  ஆயுதப் படை, சிறப்பு காவல் படை மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்கள், தீயணைப்பாளர்கள் என மொத்தம் 3,552 பணியிடத்துக்கு 3.66லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 887 பேர் ஆண்கள். 66 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 50 பேர் திருநங்கைகள் ஆவர். சென்னையை பொறுத்தவரை கே.கே. நகர், ராமாபுரம், கிண்டி அண்ணா பல்கலைக் கழகம், வேளச்சேரி, அமைந்தகரை மற்றும் தனியார் கல்லூரிகள் என 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஏராள மானோர் தேர்வு எழுதினர். அந்த வகையில் சென்னை புரசைவாக்கம் அழகப்பா  பள்ளியில் 500 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 250 பேர் தேர்வு எழுத வர வில்லை. காலை 10 மணிக்கு துவங்கிய  இந்த தேர்வானது மதியம் 12.40 வரை நடைபெற்றது. தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்களை காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் தேர்வு எழுத அனுமதித் தனர்.  தேர்வுக்கு விண்ணப்பித்த 3.66 லட்சம்பேரில் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுத வில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

;