கோவை, ஏப்.9- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் “ஒரே ஊரு, ஒரே சுடுகாடு” பிரச்சாரத்தை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு ஏப்ரல் 8 சனிக் கிழமையன்று கோவையில் துவக்கி வைத்தார். புரட்சியாளர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், “ஒரே ஊரு, ஒரே சுடுகாடு” என்னும் பிரச்சார இயக்கத்தின் துவக்க விழா கோவை அண்ணாமலை அரங்கத்தில் சனியன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் இரா.ஆறுச்சாமி தலைமை ஏற்றார். மாவட்ட பொரு ளாளர்,
ஆர் மகேஸ்வரன் வரவேற்றார். திராவிடர் தமிழர் கட்சியின் தலை வர் சி.வெண்மணி, திராவிடர் விடு தலை கழக தலைவர் நேருதாஸ், தமிழ் புலிகள் கட்சி முதன்மை செயலா ளர் இளவேனில் ஆகியோர் வாழ்த்து ரையாற்றினர். உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு பிரச்சாரத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னதாக தமுஎகச கோவை மாவட்டக்குழு சார்பில் பாடல் நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு-வின் சுயசரிதையான “நானும் நீதிபதி ஆனேன்” என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலை வர் யு.கே.சிவஞானம் நூலை அறி முகம் செய்து வைத்து உரையாற்றி னார். முடிவில், மாவட்ட துணைச்செய லாளர் கே.ரத்தினகுமார் நன்றி கூறி னார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.