tamilnadu

img

மதுரையில் டெங்குக்கு ஒருவர் பலி.....

மதுரை:
மதுரையில் டெங்கு காய்ச்சலு க்கு ஏழு வயது சிறுவன் பலியானார்.மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த  சத்தியப்பிரியா என்பவரது ஏழு வயது மகன் திருமலேஷ். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளியன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த னர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஏழு வயதுச் சிறுவன் திருமலேஷ் வெள்ளியன்று பலியானார். இந்த நிலையில் அவரது சகோதரர் ஒன்பதுவயதான மிருத்தின் ஜெயன், டெங்குகாய்ச்சல் பாதித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.திருமலேஷ் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் ஆறு பேர், நவம்பரில் 14 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஜனவரி 22-ஆம் தேதிவரை 45 பேர் டெங்குவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெங்கு பாதிப்பு பிப்ர வரி மாதம் வரை இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

;