tamilnadu

img

முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்

சென்னை, டிச. 14 - மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணநிதிக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்களின்ஒரு நாள் ஊதியத்தை வழங்குவார்கள் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பா ளர் கூட்டம் வியாழனன்று (டிச.14) சென்னை யில் நடைபெற்றது.அதன் பின்னர், ஒருங் கிணைப்பாளர்களில் ஒருவரான மு. அன்பரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மிக்ஜம் புயல் வெள்ள துயர்துடைப்பு பணியில் தமிழ்நாடு அரசு கடுமையாக ஈடு பட்டுள்ளது. இந்த பணியில் 14 லட்சம் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் தங்களுடைய பங்களிப் பாக ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவெடு த்துள்ளோம். ஒருநாள் ஊதியத்தை விட கூடுதலாக வழங்க விரும்பும் ஊழியர்க ளுக்கு, அதற்கான வழிவகைகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிவாரணம் மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உறுப்பி னர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குவார்கள் என்று சங்கத்தின் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளனர்.