மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான வரவேற்புக்குழு திண்டுக்கல் மாவட்டத்தில் திங்களன்று அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அகில இந்திய மாநாட்டிற்காக மாவட்டத்தில் உள்ள கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரது குடும்பமும் பங்களிப்பு செய்யும் விதத்தில் சிறிய தொகையை சேமிக்கும் விதமாக 3ஆயிரம் உண்டியல்கள் வழங்கப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., ஜி.ராணி, மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.