tamilnadu

img

ஜுன் 3ல் சொத்து வரிஉயர்வை கண்டித்து ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி , மே 31சொத்து வரி உயர்வுக்கு எதிராக 3ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது  எனசொத்து வரி உயர்வுக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் முத்தையபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் கடந்தசெவ்வாய் அன்று முன்னாள் மாமன்றஉறுப்பினர் சாமுவேல் ஞானதுரை தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில். தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் உயர்த்தபட்டுள்ள சொத்துவரியை ரத்த செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம்   ஜுன் 3 தேதியன்று மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பேச்சிமுத்து, புறநகர செயலாளர் பா ராஜா ,வாலிபர்சங்க மாவட்ட பொருளாளர் டேனியல், காங்கிரஸ் கட்சியின் மாநகர்மாவட்ட துணை தலைவர் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத்  மற்றும் தூத்துக்குடி தெற்கு மண்டல பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள் வியாபாரி சங்கங்கள், ஜனநாயக அமைப்புகள்   சார்பில்    பலர் கலந்துகொண்டனர்.