tamilnadu

அதிகாரிகளின் மெத்தனப் போக்கே நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு காரணம் உயர்நீதிமன்றக் கிளை குற்றச்சாட்டு

மதுரை, ஆக. 3- அதிகாரிகளின்  மெத்தனப் போக்கே,  நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு முக்கியக்  காரணம். என சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை குற்றம்சாட்டியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முத லைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை (65). மகன் நல்லதம்பி(45). இவர்கள் இருவரும்  அதேபகுதியில் உள்ள குளத்தில் உள்ள  ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சிகள் எடுத்து வந்தனர். இதனால் இவர்களுக்கும் ஆக்கி ரமிப்பாளர்களுக்கும் விரோதம் ஏற்பட்டு ள்ளது.  இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில், அதிகாரிகள் ஆக்கிரமிப்புப் பகுதி களை அளவீடு செய்தனர். அப்போது அவர்க ளுக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளை நல்ல தம்பி காட்டியதாகக் கூறப்படுகிறது.  இந்த நிலையில் திங்கள்கிழமை நல்ல தம்பி மற்றும் வீரமலையை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. குளித்தலை காவ ல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இதனிடையே முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (36), பிரபாகரன் (27), கவி யரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22), சண்முகம் (34) ஆகியோர் மதுரை மாவட்ட  ஆறாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர். இந்நிலை யில் கரூர் அருகே சமூக ஆர்வலர், மகன்  கொலை வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீதிபதிகள் சத்திய நாராயணன் - புகழேந்தி  ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. இதையடுத்து நீதிபதிகள்  நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது  தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டாலும், அவை முறையாக நடைமுறைப்ப டுத்தப்படுவதில்லை என வருத்தம் தெரி வித்தனர்.  தொடர்ந்து, நடவடிக்கை எடுக்காத அதி காரிகளின்  மெத்தனப் போக்கே, நீர்நிலை  ஆக்கிரமிப்புகளுக்கு முக்கியக் காரணம். நிறைவேற்றப்படாத உத்தரவுகளின் கீழும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க லாம் என்பதை இந்த நீதிமன்றம் நினை வூட்டுகிறது என தெரிவித்த நீதிபதிகள்  வழக்கு குறித்து கரூர் மாவட்ட காவல்துறை  நிலை அறிக்கை தாக்கல் செய்யவும்,  சம்பந்தப்பட்ட குளத்தின் மொத்த  அளவு எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளன? எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டுள்ளன? பட்டா எதனடிப்படையில் வழங்  கப்பட்டது என்பது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.