tamilnadu

img

காலைச் சிற்றுண்டி திட்டத்தையும் சத்துணவு ஊழியர்களிடமே வழங்குக!

 சென்னை, மே 19- காலைச் சிற்றுண்டி  திட்டத்தையும் சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 39ஆவது அமைப்பு தினத்தையொட்டி சென்னை தேனாம்  பேட்டையிலுள்ள மாநில மைய அலு வலகத்தில் மாநிலத் தலைவர் ஆர்.கலா தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பி.ராமமூர்த்தி பங்கேற்று  உரையாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் அ.மலர்விழி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ, சென்னை மாவட்டத் தலை வர் சித்ரகலா, செயலாளர் சுந்தர மூர்த்தி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தேசிங்கு உள்ளிட்டு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலப் பொதுச் செயலாளர் அ.மலர்விழி, “மயிலாடுதுறையில் நடந்த மாநில செயற்குழு முடிவின் படி மாநிலம் முழுவதும் அனைத்துக்  கிளைகளிலும் அமைப்பு தினத்தை யொட்டி கொடி ஏற்றப்பட்டது”

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் சங்கம் வரவேற்கி றது. ஆனால், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு அரசு சுய உதவிக் குழு பெண்களை பயன்படுத்துவதால், அந்தத் திட்டத்தை ஏற்று நடத்தும்  நபர்களிடம் வைப்பறை சாவியை கொடுப்பதில்லை என்று தமிழ்நாடு  முழுவதும் ஒன்றிய ஆணைய ருக்கு 300க்கும் மேற்பட்ட ஒன்றியங் களிலிருந்து பெருந்திரள் முறையீடு மூலம் மனு அளிக்கப்பட்டது. ஆனா லும் நடவடிக்கையில்லை. இதனால், வருகிற 29ஆம் தேதி மாவட்டத் தலைநகரில் பெருந்திரள் முறையீடு நடத்தி மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்”என்றார். தமிழ்நாடு முதல்வர், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி களை அழைத்து வாழ்வாதார கோரிக் கைகளான காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதி யம், காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9,000 வழங்க  வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்க ளிடமே வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.