tamilnadu

img

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கிடுக!

நாமக்கல், ஜூலை 20- கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கரும்பு விவசாயி களுக்கு ஊக்கத்தொகை வழங்கு வதை மாற்றி அமைத்து,  2018க்கு முன்பு இருந்தது போல மாநில அரசு விலை யாக எஸ்ஏபி அறிவித்து வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு  விவசாயிகள் சங்கத்தினர் வியாழ னன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் செயல்படும் பொன்னி தனியார் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆலை மட்ட கிளை தலைவர் இ.முத்துசாமி தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் செ.நல்லாகவுண்டர் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். இதில், பொருளாளர் ஏ.பி.பழனிச்சாமி, துணைத்தலைவர்கள் சி.லோகநாதன், பி.சுப்பையன், எஸ்.தங்கராசு, துணைச்செயலாளர் ஏ.குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.