tamilnadu

img

காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்க திருவாரூர் மாவட்ட மாநாடு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு திருவாரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். மகாலெட்சுமி, பொருளாளர். சி. வசந்தி ஆகியோர் அறிக்கைகள் சமர்பித்தனர். மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப்பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம் துவக்க உரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் லதா, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ஆர். கலா, மாநிலப் பொதுச்செயலாளர் ஆர். மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக ஆர்.மகாலெட்சுமி, மாவட்டச் செயலாளராக என். ஜோதி, மாவட்டப் பொருளாளராக ஏ. விஜயலெட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினராக எஸ். கற்பகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.